திருடப்பட்ட பதிவுப் புத்தகம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு காரின் உரிமைப் பரிமாற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி காரொன்றை நகல் எடுத்த நபர் ஒருவர் வென்னப்புவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வாகனப் பதிவுப் புத்தகம் மற்றும் உரிமைப் பரிமாற்ற ஆவணங்கள் திருடப்பட்டு, புதிய பதிவுப் புத்தகத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி கார் ஒன்றின் உரிமையாளரிடமிருந்து வென்னப்புவ காவல்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் நேற்று (05) ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் போது, அசல் வாகனத்தின் இலக்கத் தகடு மற்றும் நிறத்துடன் கூடிய வாகனத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ பொலிஸார் இரு வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பிரிவு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.