முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (11) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்கான காரணத்தை, ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி முன்னாள் ஜனாதிபதி வெளியிட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்தமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு மாதத்திற்குள் 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த வழக்கு இன்று (11) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன, மைத்திரிபால சிறிசேன இன்னும் குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை செலுத்தவில்லை என்று நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதன்படி, நீதிமன்றம் மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜராகி இழப்பீட்டுத் தொகை உத்தரவை மீறியதற்கான காரணத்தைக் வெளியிடுமாறு அறிவுறுத்தி அழைப்பாணை அனுப்பியது.