கிழக்கு மாகாண தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதியளித்தார்.
ஆளுநருக்கும் அகில இலங்கை தாதியர் சேவைகள் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (12) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தாதியர் சேவைகள் சங்கம் ஆளுநரிடம் முன்வைத்த போதே, அவற்றை தீர்ப்பதற்கு உடன்பாடு எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. ஏ. சி. என். தலங்கம, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர். டி.ஜி.எம். கொஸ்தா மற்றும் அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.