இந்தியாவை பொறுத்தவரையில் சிங்கள மக்களை பகைத்துக்கொண்டால் நாம் இலங்கையிலிருந்து முற்றாக ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது.
இலங்கை நாட்டுக்கு என்று ஒரு அமைவிட வலிமை உள்ளது.
எனவே, நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் விரும்புகினறன.

அண்மைக்காலமாக தமிழர் பகுதிகளில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த விகாரை விஸ்தரிப்புகள் போன்ற விடயங்களிலும் இந்தியா ஒரு மெத்தனப்போக்கையே கடைபிடிக்கின்றது.

அதற்கான காரணங்களாக சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளக்கூடாது மற்றும் ஈழத்தமிழர்களுக்கு நாட்டில் ஒரு அதிகாரம் கிடைத்து விடக்கூடாது என்ற இந்தியாவின் எண்ணம் ஆகும் என அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.