ரணில் விக்ரமசிங்கவின் படலந்த விவகாரத்தை தொடர்ந்து, நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் அனைத்தும் மீள் தோண்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், படலந்த சித்திரவதை முகாம் உட்பட்ட முக்கிய சம்பவங்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்குமாயின் பல முக்கிய தரப்புகளுக்கு சிக்கல் ஏற்படும்.

அந்தவகையில், வடக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது முன்னெடுக்கப்பட வேண்டிய விசாரணைகள், இலங்கை இராணுவத்திற்கு எதிராகவே அமையும் என்கின்றார் அமெரிக்க சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீத பொன்கலன்.
அதேவேளை, படலந்த விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமல்லாமல் சஜித் பிரேமதாசவிற்கும் சிக்கல்நிலை ஏற்படுவதற்கான இயலுமை இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.