Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 161வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் 161வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு

2 months ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 161 வது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது .

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி, உயிரிழந்த பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களை நினைவு கூறும் முகமாக தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் திணைக்களங்களிலும் , பொலிஸ் நிலையங்களிலும் நினைவு கூறப்பட்டது

பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயசூரிய சிந்தனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்ற நிகழ்வின் கீழ் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருன ஜயசுந்தர ஆலோசனையின் கீழ் தேசிய பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இன்று வரையான காலத்தில் சுமார் 5759 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களை நினைவு கூறும் நிகழ்வாக தேசிய ரீதியில் வருடந்தோறும் மார்ச் மாதம் அனுச்டிக்கப்படுகின்றது .

1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட சபான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார் .

அன்று முதல் இன்று வரை 5759 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களை நினைவும் கூறும் முகமாக வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன .

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நினைவு கூறும் நிகழ்வானது , கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருன ஜயசுந்தர தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொலிஸ் திணைகள் கொடியேற்றப்பட்டு இறந்தவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட 12 பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவுகளால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, தொடர்ந்து கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருன ஜயசுந்தர விசேட உரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட 12 பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் . பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறவுகள் என பலர் கலந்து கொண்டனர்.

1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இன்று வரையான காலத்தில் இலங்கையில் உயிரிழந்த 5759 பொலிஸ் உத்தியோகத்தர்களில் கிழக்கு மாகாணத்தில் 417 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் வீசிய குண்டு; ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலர் பலி
உலக செய்திகள்

வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் வீசிய குண்டு; ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலர் பலி

May 13, 2025
மட்டக்களப்பில் தக்காளி கிலோ -1300/= கரட் கிலோ-1000/=
செய்திகள்

மட்டக்களப்பில் தக்காளி கிலோ -1300/= கரட் கிலோ-1000/=

May 13, 2025
மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் சித்திரை புத்தாண்டு தின நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் சித்திரை புத்தாண்டு தின நிகழ்வு

May 13, 2025
மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு வார ஆரம்ப நிகழ்வில் மக்களை அச்சுறுத்தும்வகையில் புகைப்படம் எடுத்த பொலிஸ்
காணொளிகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு வார ஆரம்ப நிகழ்வில் மக்களை அச்சுறுத்தும்வகையில் புகைப்படம் எடுத்த பொலிஸ்

May 13, 2025
கொங்கோவில் ஏற்பட்ட கனமழையால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
உலக செய்திகள்

கொங்கோவில் ஏற்பட்ட கனமழையால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

May 13, 2025
கண்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்து; 37 பேர் காயம்
செய்திகள்

கண்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்து; 37 பேர் காயம்

May 13, 2025
Next Post
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ள ஜீவன் தொண்டமான்

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ள ஜீவன் தொண்டமான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.