குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி புதுக்குடியிருப்பு உட்பட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் லலித் லீலாரத்னவின் வழிகாட்டலில், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரத்நாயக்காவின் பணிப்புரையின் பேரில் பொலிசார் குறித்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது சகிப்பு உற்பத்தி செய்த மற்றும் விற்பனை செய்த 28 பேரும், கேரள கஞ்சாவை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த 18 பேரும்பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ், கேரள கஞ்சா, கசிப்பு போதை பொருள், சிகரட்கள், சகிப்பு தயாரிப்பு உபகரணங்கள், எரிவாயு சிலிண்டர் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதே நேரம் சட்டவிரோத முறையில் மணல் ஏறாறிவந்த ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
