கிழக்கு மாகாணத்தில் கடல் வளங்களை பயன்படுத்தி கடற்றொழிலாளர்களுக்கு அதிகளவான வருமானங்களை ஈட்டும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அலுவலகத்திற்கு இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (27) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அமைச்சராக பதவி ஏற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முதல் தடவையாக விஜயத்தினை மேற்கொண்ட அவர், குறை நிறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதன் போது கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பான கருத்துக்கள் அமைச்சரிடம் முன்வைத்ததினைத் தொடர்ந்து, குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வினை மிக விரைவாக பெற்றுத் தருவதாகவும், சட்டவிரோத கடற்றொழிலை தடுத்து கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஆற்றினை ஆளப்படுத்துதல், களப்பு இறங்குதுறை அமைத்தல், புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கூடிய அளவிலான வசதிகளை ஏற்படுத்தவும், சட்டவிரோத தொழில் வலைகளை தடுக்கும் முகமாகவும் பல கோரிக்கைகளும், ஆள் கடல் கடற்றொழில் தொடர்பாகவும் இதன் போது பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


