Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலிகள் அமைப்பில் ஆயுத பயிற்சி எடுத்து புனர்வாழ்வளிக்கப்படாத முஸ்லிம்களே ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம்

புலிகள் அமைப்பில் ஆயுத பயிற்சி எடுத்து புனர்வாழ்வளிக்கப்படாத முஸ்லிம்களே ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம்

2 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

திட்டமிட்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் மீண்டும் மதரீதியாக வன்முறையை தூண்டுவதற்காக சூப்பர் முஸ்லிம் போன்ற சில இஸ்லாமிய அமைப்புக்களும் சில அரசியல்வாதிகளும் முயற்சித்து வருகின்றனர். எனவே நாட்டின் இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறு இன மத கலவரத்தை தூண்டக்கூடிய இவர்களை அரசாங்கம் உடன் கைது செய்ய வேண்டும் என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி தலைவர் சிவதர்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வெஸ் ஒப் மீடாக கற்கை நிலையத்தில் நேற்று (01) இடம் பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய நபர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்ததே அதே விஷயத்தை தான் செய்வேன் முடிந்தால் இலங்கை அரசாங்கம் பார்க்கட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹித் ரகுமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக ஒருவரை கைது செய்தது இலங்கை அரசின் பாதுகாப்பு சம்மந்தமான விஷயம். ஆனால் பயங்கரவாத சிந்தனையில் உள்ள ஒருவரை கைது செய்த அந்த விஷயத்தை தான் செய்வேன் என தெரிவித்து முன்னிற்கும் இப்படியான அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் போது பயங்கரவாதம் தலைதூக்கும்.

கடந்த 2019 ஏப்பிரல் 21 இதேபோன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஸாரான் என்ற பயங்கரவாதியால் அப்பாவி கிறிஸ்தவ மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். எனவே நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளும் அதை விடுத்து சிலர் இதனை அரசியலாக்கி, மதரீதியான ஒரு பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

அதேவேளை இஸ்ரேல் காசா பிரச்சனை சர்வதேச பிரச்சனை. அதை அந்த நாடுகள் பார்க்கட்டும் எனவே 3 இனங்களும் 4 மதங்களும் கொண்டு வாழ்கின்ற இந்த நாட்டிலே மீண்டும் இனரீதியாக மதரீதியாக வன்முறையை தூண்டுவதற்காக இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குபவர்கள் ஏதோ பயங்கரவாதிகள் போல சித்தரித்து செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாட்டால் இஸ்லாமிய அமைப்புகள் மீது நாங்கள் கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். திட்டமிட்டு தற்கொலை தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளோம். சஹ்ரான் ஒரு இஸ்லாமியர். அவர் இந்த தற்கொலை தாக்குதலை செய்வதற்கு முன்னர், “இஸ்லாம் மதத்தை இல்லாதவர்கள் ஹாபீர்கள் என்றும், அவர்கள் கொல்லப்படவேண்டும், இந்த பயங்கரவாத தாக்குதலை செய்வதால் தங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்” என சத்திய பிரமாணம் செய்த ஒரு காணொளியை ஊடகங்கள் ஊடாக பார்த்துள்ளோம்.

இந்த நிலையில் கிழக்கில் கல்முனையில் சூப்பர் முஸ்லிம் என இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இவர்கள் மத தீவீரவாதத்தை பரப்புகின்றனர்? என கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. ஏன் என்றால் சஹ்ரானினால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் சஹ்ரானினால் மேற்கொண்ட இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கான நீதி மௌனிக்கப்பட்ட கொண்டிருக்கின்றது. இந்த தாக்குதலுக்கு முஜாஹித் ரகுமான் என்ற அரசியல்வாதி நீதிகேட்டு நாடாளுமன்றில் பேசி இருப்பாரா? எனவே இவர் இந்த திட்டமிட்டு செய்தவர்களை காப்பாற்றும் நோக்கத்தோடு திசைதிருப்பும் நோக்கத்தோடு காசா இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

காசா இஸ்ரேல் யுத்தம் சர்வதேச ரீதியான அரசியல் பிரச்சனையை எங்கள் இலங்கை உள்நாட்டு அரசியலுக்குள் திணிப்பது ஏன்? உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட எங்களது வடுக்கள் ஆறாத நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இவரைப் போல அரசியல்வாதிகள் கடும் தீவிரமாக மதப் பிரச்சனையை கொண்டுவரக் கூடிய செயற்பாடாக இருக்கின்றது.

இவ்வாறு இவர்களது நடவடிக்கையை பார்க்கும் போது பயமாக இருக்கின்றது. தற்போது சூப்பர் முஸ்லிம் அமைப்பு ஆரம்பித்துள்ளது. இந்த அமைப்பும் சஹ்ரான் போன்ற அடிப்படை வாத சிந்தனை போன்றவர்களா? இவர்களும் சஹ்ரான் குழுவைப் போன்று பாரிய குண்டுவெடிப்புகளை செய்வார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது/

தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையே மீண்டும் ஒரு பாரிய மதரீதியான பிரிவினையை ஏற்படுத்த போகின்றார்களா? கடந்த 30 வருடத்திற்கு முன்னர் இஸ்லாமிய இளைஞர்களும் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்து ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் புலிகளில் இருந்து வெளியேறிய அவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை.

இவ்வாறு புலிகள் அமைப்பில் ஆயுத பயிற்சி எடுத்துவிட்டு வெளியேறிய அவர்களை புனர்வாழ்வு அளிக்கப்பட்டு பாதுகாத்த அந்த நேர அரசியல் தலைவர்கள் யார்? அவர்கள் ஆயுதங்கள் கலையப்பட்டதா? அவர்கள் கடைசியாக சஹ்ரான் என்ற வடிவிலே 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 வெளிப்படையாக செயற்பட்டு ஒரு மதரீதியாக தற்கொலை குண்டு தாக்குதலை செய்து, பாரிய படுகொலை செய்த அமைப்பு என பெருமையை எடுத்த அமைப்பு. இஸ்லாமிய மதத்தில் இருந்து வந்த சஹ்ரான் என்பதை மறந்து விடக்கூடாது.

எனவே ஒரு சில இஸ்லாமிய அமைப்பும் சில அரசியல்வாதிகள் மதக்கலவரத்தை கொண்டுவருவதற்காக முயற்சிக்கின்றார்களா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது எனவே கடந்த காலத்தில் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தி மத கலவரத்தை ஏற்படுத்த போவதான குற்றச்சாட்டில் ஞானசார தேரரை கைது செய்து சிறையில் அடைத்து போன்று இவ்வாறு இன மத கலவரத்தை தூண்ட கூடிய இந்த முஜாஹித் ரகுமான் போன்ற அரசியல்வாதிகள் மற்றும் சுப்பர் முஸ்லிம் அமைப்பினர் கைது செய்யப்பட வேண்டும். அப்போது தான் நாட்டின் இறையான்மை இன ஒற்றுமையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க முடியும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

May 18, 2025
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

May 18, 2025
“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்
செய்திகள்

“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்

May 18, 2025
மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
செய்திகள்

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

May 18, 2025
கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
Next Post
மட்டு கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதிய கார்

மட்டு கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதிய கார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.