Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு எந்த வகையிலும் போதுமானதல்ல

ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு எந்த வகையிலும் போதுமானதல்ல

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு எந்த வகையிலும் போதுமானதல்ல என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போதைய சுற்றறிக்கையின் படி, ஆசிரியர்களின் சம்பம் 3,000 ரூபா முதல் 19,000 ரூபா வரையிலான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அடிப்படை சம்பள உயர்வு இடம் பெற்றிருந்தாலும், இதற்கு முன் வழங்கப்பட்ட 7500 ரூபா கொடுப்பனவு அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்டதனால் இவ்வாறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களும் 20,000 ரூபா ஊதிய உயர்விற்காக போராடிய நிலையில், அது இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டல்களின் அடிப்படையில் தேசிய கல்வி நிறுவனம் ஊடாக முதலாம் தரம் மற்றும் ஆறாம் தர பாடத் திட்டத்தில் மாற்றங்களை அரசாங்கம் கொண்டுவர முயற்சி செய்கின்றது என அவர் தெரிவித்தள்ளார்.

கட்சியின் செயற்பாட்டாளர்களாக கூறிக்கொள்ளும் இந்த அதிகாரிகள் மீது கணக்காய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களினால் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் குறித்த அதிகாரிகளின் வழிகாட்டல்களில் பாடத் திட்ட மாற்றம் செய்வதானது அரசாங்கத்தின் தற்கொலை முயற்சியாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டம் எட்டாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். எனினும், 2023 ஆம் ஆண்டில் இதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாததால், சுமார் 43 இலட்சம் மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழைய பாடத்திட்டத்தின்படி கல்வி பயில வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முதலாம் மற்றும் ஆறாம் தர பாடத்திட்டங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசு தெரிவித்திருந்தாலும், இவ்வாண்டு ஏற்கனவே மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அந்த மாற்றங்கள் குறித்து அதிபர்கள், ஆசிரியர்கள் எவருக்கும் தெளிவான தகவல் வழங்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 17, 2026
இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!
செய்திகள்

இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

September 17, 2026
Next Post
ட்ரம்பின் வரி அறிவிப்பை தொடர்ந்து ஆசிய பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி

ட்ரம்பின் வரி அறிவிப்பை தொடர்ந்து ஆசிய பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.