இலங்கை மீது அமெரிக்கா 44 வீத பரஸ்பர வரி விதித்ததை தொடர்ந்து, நாடு பொருளாதார சவால்களை எதிர்கொள்வதால், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமெரிக்காவின் இந்த வரிகள் ஆடை போன்ற முக்கிய துறைகளை கடுமையாக பாதிக்கும். அத்துடன் வேலையின்மையை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை இன்னும் மீண்டு வருவதால், அரசாங்கத்தின் ஏற்றுமதி இலக்குகள் இப்போது ஆபத்தில் உள்ளன.
இதனால் பொருளாதார மீட்சி இன்னும் கடினமாகிறது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை என்றால், வரவு – செலவு திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஏற்றுமதி வருவாயைப் பராமரிக்க மாற்றுத் தீர்வுகளைத் தேட வேண்டும்” என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த மிகப்பெரிய தடையை நாம் எதிர்கொள்ளும் வேளையில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட துறைகளை ஆதரிக்க வேண்டிய நேரம் இது என்றும் நாமல் ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.