Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகின் மிக அமைதியான நாடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நாடு

உலகின் மிக அமைதியான நாடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நாடு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

ஒரு நாட்டை பொறுத்தவரை பாதுகாப்புதுறை என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் உலகில் ஆச்சரியப்படும் விதமாக, இராணுவமோ அல்லது பொலிஸ்துறையோ இல்லாத சில நாடுகளும் உள்ளன.

இந்த நாடுகள் உலகின் பாதுகாப்பான மற்றும் மிகவும் அமைதியான நாடுகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

வலுவான ராஜ தந்திரம், அண்டை நாடுகளுடனான நட்புறவுகள் மற்றும் அகிம்சைக்கான அர்ப்பணிப்பு மூலம் இந்த நாடுகள் தனித்துவம் வாய்ந்து காணப்படுகின்றன.

ஐஸ்லாந்து வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு சிறிய ஆனால் பிரமிக்க வைக்கும் நாடாகும்.

இந்நாட்டில் நிலையான இராணுவம் இல்லை. நேட்டோவின் உறுப்பினராக இருப்பதால், தேவைப்பட்டால் அதைப் பாதுகாக்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

மேலும், இந்நாட்டில் வலுவான சட்டம் ஒழுங்கு உள்ளது. இதன் குடிமக்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். குற்ற விகிதங்களும் குறைவாகவே உள்ளன.

இதனால் பெண்கள் இரவில் தனியாக நடப்பதை பாதுகாப்பாக உணர்கிறார்கள். குழந்தைகள் பெரும்பாலும் தாங்களாகவே பள்ளிக்குச் செல்கிறார்கள். உலகளாவிய அமைதி குறியீட்டில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

லிச்சென்ஸ்டீன் சுவிட்சர்லாந்துக்கும், ஆஸ்திரியாவிற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடாகும்.

செலவுகள் அதிகமாவதன் காரணமாக 1868-ம் ஆண்டு லிச்சென்ஸ்டீன், தனது இராணுவத்தை ஒழித்தது. குறிப்பிடத்தக்க வகையில், லிச்சென்ஸ்டீன் எந்தப் போரிலும் பங்கேற்றதில்லை.

எப்போதும் அமைதியான பாதையைப் பின்பற்றி வருகிறது. அவசர காலங்களில், சுவிட்சர்லாந்து உதவ முன்வருகிறது.

அடிப்படை பாதுகாப்பிற்காக மட்டும் நாட்டில் ஒரு சில பொலிஸார் மட்டுமே உள்ளனர்.

உலகின் மிகச்சிறிய நாடாகவும், கிறிஸ்தவத்தின் மையமாகவும் இருக்கும் வாடிகன் நகரத்திலும் முறையான இராணுவம் இல்லை.

பாப்பரசரை பாதுகாக்க பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட சுவிஸ் பொலிஸார்கள் உள்ளனர்.

கூடுதலாக, இத்தாலிய பொலிஸ்துறை மற்றும் இராணுவம் அவசரகால ஆதரவை வழங்குகின்றன. குற்ற விகிதம் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். மேலும், இங்குள்ள மதச் சூழல் பாதுகாப்பு உணர்வுக்கு கணிசமாக பங்களிக்கிறது.

பிரான்சுக்கு அருகில் அமைந்துள்ள மொனாக்கோ, சொந்த இராணுவம் இல்லாத ஒரு பணக்கார மற்றும் சிறிய நாடு ஆகும்.

பிரான்சுடனான ஒரு ஒப்பந்தத்தின் கீழ், தேவைப்பட்டால் பிரெஞ்சு இராணுவம் பாதுகாப்பை வழங்குகிறது.

உள்ளூர் பொலிஸ்துறை சிறிய குற்றங்களைக் கையாளுகிறது. ஆனால், இந்நாட்டின் சூழ்நிலை மிகவும் அமைதியானது. ஆகையால் குடியிருப்பாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

ஸ்பெயினுக்கும், பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ள அன்டோராவில் நிரந்தர இராணுவம் இல்லை. பாதுகாப்புப் பொறுப்புகள் ஸ்பெயினுக்கும், பிரான்சுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

இயற்கை அழகு, சுற்றுலா மற்றும் அமைதியான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற அன்டோரா, மிகக் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்டுள்ளது.

மேலும், அதன் குடிமக்கள் அமைதியான வாழ்க்கை முறையை அனுபவிக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
Next Post
தமிழர்களின் வரலாற்று பயணம் முள்ளிவாய்க்காலில் நின்று விடுமா அல்லது அதனையும் தாண்டி பயணிக்குமா?

தமிழர்களின் வரலாற்று பயணம் முள்ளிவாய்க்காலில் நின்று விடுமா அல்லது அதனையும் தாண்டி பயணிக்குமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.