நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளை உறவினர்கள் open visit என்னும் திட்டத்தின் ஊடாக பார்வையிடுவதுடன் கைதிகளுடன் உறவினர்கள் புத்தாண்டைக் கழித்தனர்.
இச் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுடன் புத்தாண்டைக் கொண்டாட பெருமளவிலான சிறைக் கைதிகளின் உறவினர்கள் வருகை தந்திருந்தனர்.

சிறைச்சாலைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் சிறைச்சாலையின் கைதிகளைப் பார்வையிடும் இணையதளங்களில் செயற்பாடுகள் இடம் பெற்றன. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


