கம்பஹா நகரில் உள்ள பொது பேருந்து நிலையம் அருகே நேற்று (15) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ஓடும் சிறிய லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். லொறியில் இருந்த இருவர் பாதுகாப்புக்காக வாகனத்தை விட்டு இறங்கி அருகிலுள்ள கடைக்குள் ஓடினர்.
அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.