Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 6ம் ஆண்டு நினைவாக இரத்ததான முகாம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 6ம் ஆண்டு நினைவாக இரத்ததான முகாம்

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

2019.04.21 அன்று இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளின் 6ம் ஆண்டு நினைவாக நேற்று (21) “உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்கு உதிரம் கொண்டு செலுத்தும் அஞ்சலி” என்னும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் சுஜீவா தலைமையிலும், மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும், இளைஞர் சேவை அதிகாரி மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தருமாகிய A. தயாசீலன் அவர்களின் வழிகாட்டளின் கீழும் இவ் இரத்த தான முகாமானது தாண்டவன் வெளி மாதா கோவில் அருகில் அமைந்துள்ள பேடினன்ஸ் மண்டபத்தில் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி மற்றும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோத்தர் மாணிக்கபோடி சசிகுமார் மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் திரு M.ரம்ஷி என பல இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு, இரத்ததானம் செய்யும் உன்னத பணியில் ஈடுபட்திருந்தனர்.

இதன் போது இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேசசமயம் சான்றிதழ்களை ஏற்பாடு செய்த AIM FOR DREAM அமைப்பின் I.செந்தூரன் அவர்களுக்கும், அவருடன் இணைந்து பங்களிப்பு வழங்கிய முன்னாள் பிரதேச சம்மேளன தலைவர் S.லவண்ராஜ் அவர்களுக்கும், சிற்றுண்டிகளை வழங்கிய முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் ஜெயராசா பயஸ்ராஜ் அவர்களுட்கும், மரக்கன்றுகளை வழங்கிய ஸ்டுடியோ ஜே.கே. உரிமையாளருக்கும், மெழுகுவர்த்திகளை வழங்கிய செல்வி கௌசல்யா அவர்களுட்கும், அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஏற்பாட்டுக்குழுவினர் மேலும் தெரிவித்திருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
செய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

June 9, 2025
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
செய்திகள்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

June 9, 2025
700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது
செய்திகள்

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

June 9, 2025
சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை
உலக செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வருகிறது ட்ரம்பின் 12 நாடுகளுக்கான தடை

June 9, 2025
Next Post
மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலையில் இரண்டாம் இடம்

மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலையில் இரண்டாம் இடம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.