புத்தளத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறி ஆதரவாளர்களின் உதவியுடன் தேர்தல் துண்டுப்பிரசுரங்களை வீடு வீடாக பகிர்ந்த குற்றச்சாட்டிலேயே பெண் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் – தில்லடி பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 86 தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.