ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கதிர்காமம் வீடு தொடர்பிலான விசாரணைகளுக்கமைய கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று (29) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.