பொலன்னறுவை வடக்கு பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (03) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

49 வயதுடைய பெண்ணொருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.