நாடளாவிய ரீதியில் கடந்த (05) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 08 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 12 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 02 பேரும், போதை மாத்திரைகளுடன் 03 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 108 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 25 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும்,
128 கிலோ கஞ்சா போதைப்பொருளும், 105 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.