புதிய அளவையாளர் நாயகமாக வை.ஜீ.ஞானதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அளவையாளர் நாயகமாக கடமையாற்றிய இலங்கை அளவை சேவையின் விசேடதர அதிகாரியான யூ.கே.எஸ்.பீ. விஜேசிங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றமையினால் புதிய அளவையாளர் நாயகம் பதவிக்கு இலங்கை நில அளவை சேவையின் விசேடதர அதிகாரியான வை.ஜீ. ஞானதிலக்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைய அமைச்சரவை இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.