வெண்புகை வெளியேறியது புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடியிருந்த 133 கார்தினால்கள் ஒன்று கூடிய புதிய பாப்பரசரை தெரிவு செய்துள்ளனர்.
புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் விரைவில் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் மையப் பகுதியினூடாக மக்களுக்கு தோன்றுவார்.
புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது.

முதலில் இடம்பெற்ற வாக்குப் பதிவுக்குப் பின்னர் சிஸ்டைன் சிற்றாலயத்துக்கு மேல் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதன் அர்த்தம் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படவில்லை என்பதாகும்.
இந்நிலையில், 2ஆவது தடவையாகவும் சிஸ்டைன் சிற்றாலயத்திற்கு மேல் பொருத்தப்பட்டுள்ள புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. ஏனெனில், இதுவரை ஒரு புதிய பாப்பரசரை தெரிவு செய்யவில்லையென்பதே அர்த்தம்.
இதையடுத்து 3 ஆவது தடவையாகவும் பாப்பரசரை தெரிவு செய்யும் வாக்குப் பதிவு இடம்பெற்ற நிலையில், தற்போது வெண்புகை வெளியேறியுள்ள நிலையில், புதிய பாப்பரசர் தெரிவாகியுள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ஆம் திகதி உடல் நலக்குறைவால் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். அவரது திரு உடல் 26ஆம் திகதி ரோமில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.