இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தயார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் தற்போதைய நிலவரம் கவலை அளிக்கிறது. நிலைமையை மேலும் சிக்கலாக்காமல் இரு நாடுகளும் நிதானம், அமைதி, பொறுமையை கடைபிடிக்க வேண்டும். என்பதோடு சர்வதேச சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

சீனாவின் நிலைப்பாட்டை நேற்று (8) இருநாடுகளின் தரப்பிலும் தெரிவித்து விட்டோம். அனைத்து வகையான தீவிரவாதத்தையும் எதிர்க்கிறோம். உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறியுள்ளார்.