இலங்கையின் ஏற்றுமதி வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டில் மாத்திரம் ஏற்றுமதிகள் ஊடாக 3 ஆயிரத்து 347 மில்லியன் டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 5.3 வீத வளர்ச்சியாகும்.
ஆடைகள், புகையிலை உற்பத்திகள், உணவுப்பொருட்கள், தேங்காய் போன்ற பொருட்களின் ஏற்றுமதி ஊடாகவே இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதே நேரம் நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டில் இலங்கையின் இறக்குமதி செலவு 4 ஆயிரத்து 887 மில்லியன் டொலர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
