தன்னால்தான் போர் போர் நிறுத்தம்
இந்தியா –பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் கூறியதாவது,
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல இலட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உட்பட நிறைய உதவிகளை செய்தோம். போரை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.

‘வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை’ என்றும் தெரிவித்த அவர்,
வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் எனக் கூறி இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளதற்கு இந்தியா அதிகாரபூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால்,
“ஒபரேஷன் சிந்தூர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்கள் இடையே அவ்வப்போது உரையாடல் நடந்தது. ஆனால் அவற்றில் வர்த்தகம் தொடர்பான பேச்சே எழவில்லை” என்று தெரிவித்தார்.