அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக தங்கியுள்ள இந்தியர்கள் விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

ட்ரம்பின் இந்த புதிய அறிவிப்பால் அங்கு வசித்து வரும் 45 இலட்சம் இந்தியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவில் சட்டபூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.