உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் சிலாபம் பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, 2022 ஆம் ஆண்டில், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டும் வகையில் மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக முறைப்பாடு அளித்திருந்தார்.
அதன்படி, சம்பவம் தொடர்பான உண்மைகளை பொலிசார் விசாரித்து, சட்டமா அதிபருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சந்தேக நபர் செய்த நடவடிக்கைகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் வருவதாகவும், அவருக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறை சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.