நாடளாவியரீதியில் நேற்று முன்தினம் (27) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 528 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 164 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 180 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 178 பேரும், போதை மாத்திரைகளுடன் 06 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 177 கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 360 கிராம் 633 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 04 கிலோ 303 கிராம் 746 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 124 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.