சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை பதிவிட்டு பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் ஹல்தும்முல்ல பொலிஸாரால் நேற்று முன்தினம் (28) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹல்தும்முல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை பதிவிட்டு பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஹல்தும்முல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.