Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

5 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் சூழ்நிலையில், பேச்சுவார்த்தை விவகாரத்தில் ஈரான் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிப்பதாகவும், ஆனால் பொதுவெளியில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓமனுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறி, ஈரான் தலைவர்கள் இரட்டை வேடம் போடுவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டிலும், கடுமையான பாதுகாப்பு வளையத்திலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்காவின் அனுமதி இன்றி அங்கு எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் வெளியிடும் விளக்கங்கள் வெறும் அரசியல் அறிக்கைகளே எனவும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அத்துடன், ஈரான் எந்தச் சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்படாது என்றும், இரு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் எட்டப்படும் வரை அல்லது ஈரான் முழுமையாக சரணடையும் வரை அமெரிக்காவின் இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்கள் தொடரும் என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு
செய்திகள்

கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

August 4, 2026
Next Post
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.