Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடகிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்தும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் எந்தவொரு தெளிவான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமையும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருப்பதாகவும், தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கித்துள் முந்தனை ஆறு நீர்ப்பாசன திட்டம், விவசாயம், மீன்பிடி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் போன்ற முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தாமதமடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் ஜனாதிபதி தலைமையிலான கூட்டங்களில் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், நடைமுறை நடவடிக்கைகள் மந்தமாக இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

தொல்லியல் ஆய்வுகள் என்ற பெயரில் பௌத்த அடையாளங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் ஊடாக தமிழ் மக்களின் நில உரிமைகள் மற்றும் பாரம்பரிய பகுதிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

செம்மணி மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அரசு செயற்பட வேண்டும் என்றும் இளையதம்பி சிறிநாத் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு
செய்திகள்

கண்டி, நுவரெலியாவில் மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

August 4, 2026
‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்
அரசியல்

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

August 4, 2026
மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
செய்திகள்

மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

August 4, 2026
ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!
செய்திகள்

ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!

August 4, 2026
60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!
செய்திகள்

60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!

August 4, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.