சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் வழமைபோல் இயங்கும் என மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய நிலைமையை பரிசீலித்ததையடுத்து அவற்றை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை முதல் வழக்கமான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.








