கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (30) காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டுச் சோதனையில், 10 கிலோகிராம் 323 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலி நாட்டை சேரந்தவராவார்.
சந்தேக நபர் பொம்மைகளுக்குள் மறைத்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.