குருணாகல் மாவட்டத்தில் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹமுலஹேன பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் நேற்று முன்தினம் (29) காலை மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குருணாகல், மண்டபொல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பில் மீகஹமுலஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.