இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் கல் குவாரி ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 6 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். விபத்து ஏற்பட்டபோது, 24-க்கும் மேற்பட்டவர்கள் குவாரி இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும், 6 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை. மாயமானவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.