2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார்.
72வது உலக அழகி போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றுது.

இந்த ஆண்டு, 108 போட்டியாளர்கள் உலக அழகி போட்டியில் பங்கேற்கின்றதுடன், அவர்கள் 4 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்த கண்டங்கள், அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியா எனப் பிரிக்கப்பட்டிருந்தன.
அதேசமயம் 72ஆவது உலக அழகி போட்டியின் இறுதி சுற்றிற்கு தெரிவாகும் வாய்ப்பு இலங்கை அழகி அனுதிக்கு கிடைக்கவில்லை.
ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் அனுதி குணசேகரா தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லூடகம் மற்றும் நேரடிப் போட்டிகளில் வலுவான புள்ளிகளை பெற்ற போதிலும், அவர் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெறவில்லை.
