எதிர்கால தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள 12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய பாதுகாப்பு மதிப்பாய்வு தொடர்பாக கலந்தாலோசிக்கும் போதே பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த முடிவை வெளியிட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்திற்கு £15 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் உற்பத்தி 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2030களின் பிற்பகுதியிலிருந்து ஏழு அஸ்டியூட்-வகுப்பு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை தற்போதைய கடற்படையை மாற்றும்படியாகத் திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.