Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கருணைக்கொலை செய்வதை அனுமதிக்கும் மசோதா பிரான்ஸில் நிறைவேற்றம்

கருணைக்கொலை செய்வதை அனுமதிக்கும் மசோதா பிரான்ஸில் நிறைவேற்றம்

2 days ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கருணைக்கொலை செய்வதற்கு அனுமதிக்கும் மசோதா, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

வலி மிகுந்த, நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை, எந்த சிகிச்சையாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், உயிரை மாய்த்துக் கொள்வதற்கு அனுமதிக்கும் கருணைக்கொலை, உலகெங்கும் பெரும் விவாதப் பொருளாகவே உள்ளது.

கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கும் சட்டம், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் நடைமுறையில் உள்ளன.

நெதர்லாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல், கனடா, அவுஸ்திரேலியா, கொலம்பியா, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகள், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சிலும், கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கும் கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

கடந்த, 2023ல் இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், இந்த சட்டத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், சில நிபந்தனைகளுடன் கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கும் மசோதா, பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழ் சபையான நேஷனல் அசெம்பிளியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கான மசோதாவுக்கு ஆதரவாக 305 வாக்குகளும் , எதிராக 199 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்த மசோதா, அடுத்ததாக செனட் சபைக்கு அனுப்பப்படும். அங்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், இதில் சட்டத்திருத்தம் கோரப்படும் என்று தெரிகிறது.

எனினும், செனட்டை விடவும் நேஷனல் அசெம்பிளியே அதிகாரம் மிக்கதாகும். அதனால், மசோதா சட்டமாவதில் பிரச்னை இருக்காது என்று கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணியில் இதுவரை குழந்தை உட்பட 13 என்புத்தொகுதிகள் மீட்பு
செய்திகள்

செம்மணியில் இதுவரை குழந்தை உட்பட 13 என்புத்தொகுதிகள் மீட்பு

June 5, 2025
பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவருக்கு தடை
உலக செய்திகள்

பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவருக்கு தடை

June 5, 2025
அரச வங்கியில் குறைந்த மதிப்புள்ள தங்க நகைகளை அடகு வைத்து 10 கோடி மோசடி செய்த 3 பெண் அதிகாரிகள்
செய்திகள்

அரச வங்கியில் குறைந்த மதிப்புள்ள தங்க நகைகளை அடகு வைத்து 10 கோடி மோசடி செய்த 3 பெண் அதிகாரிகள்

June 5, 2025
திருகோணமலையில் மீனவர்கள் வீதி மறிப்பு போராட்டம்
செய்திகள்

திருகோணமலையில் மீனவர்கள் வீதி மறிப்பு போராட்டம்

June 5, 2025
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

June 5, 2025
பங்களாதேஷின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் நணயத்தாள்களிலிருந்து நீக்கம்
உலக செய்திகள்

பங்களாதேஷின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் நணயத்தாள்களிலிருந்து நீக்கம்

June 5, 2025
Next Post
அகதிகள் தொடர்பில் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம்; சுமந்திரன்

அகதிகள் தொடர்பில் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம்; சுமந்திரன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.