மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரான மாத்தறையைச் சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் தலைமையில் எதிர்வரும் 11ஆம் திகதி மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அந்த அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஓர் சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (04) மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் சகிதம் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.