Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

2 days ago
in செய்திகள்

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (11) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான மக்களும் பங்குகொண்டனர்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை அடைந்தது.

பின்னர் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடி பதாதைகளை ஏந்தியவாறு பலவாறு கோஷம் எழுப்பினர்.

“மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையிலான காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து”, “எங்கள் மண்ணை சுடுகாடாக்காதே”, “அடிக்காதே, அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே” உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஞானப்பிரகாசம் அடிகளாரும் வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், மன்னார் மக்கள் எதிர்நோக்கும் இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு அளிக்கவேண்டிய மகஜரினை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மன்னார் ஆயர் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து கையளித்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர்,

மன்னார் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறித்து நான் நன்கறிவேன்.

மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் சர்வமத தலைவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில், என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனை நான் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பேன் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைய வாய்ப்பு
செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைய வாய்ப்பு

June 13, 2025
சந்தேகத்தால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்
செய்திகள்

சந்தேகத்தால் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்

June 13, 2025
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே கடமையேற்பு
செய்திகள்

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே கடமையேற்பு

June 13, 2025
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவின் மனு மீதான விசாரணை ஒக்டோபரில்
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவின் மனு மீதான விசாரணை ஒக்டோபரில்

June 13, 2025
தையிட்டி விகாரை பிரச்சனையை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க அமைச்சர் சந்திரசேகர் முடிவு
செய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சனையை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க அமைச்சர் சந்திரசேகர் முடிவு

June 12, 2025
உப்பு தட்டுப்பாடுற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்
செய்திகள்

உப்பு தட்டுப்பாடுற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்

June 12, 2025
Next Post
பதுளையில் பெரஹெராவில் யானை குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

பதுளையில் பெரஹெராவில் யானை குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.