பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெரஹெராவில்யானை ஒன்று குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்
பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (10) நடைபெற்ற பெரஹெரா நிகழ்வின் போது யானை ஒன்று குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், இந்த சம்பவத்தின் போது எவருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

பதுளை நகர வீதிகளில் 85வது முறையாக இந்த பெரஹெரா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த யானைகளில் ஒன்று குழம்பியதால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, யானை பாகன்கள் இணைந்து யானையை கட்டுப்படுத்திய பின்னர் பெரஹெரா நிகழ்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுன.