பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டிடத்தின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.
இன்று (12) வீசிய காற்றின் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.





உயிரிழந்தவர் 17 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரம் முறிந்து விழுந்ததில் சுமார் 16 மாணவர்கள் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.