மட்டக்களப்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் இலங்கை தமிழரசுக்கட்சியை தோற்கடிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் ஈபிடிபியை சந்தித்தற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், நேற்று (12) கஜேந்திரகுமாருடன் கைகோர்த்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுடனும், தேசிய மக்கள் சக்தியுடனும் இணைந்து தவிசாளர் ஒருவரை கொண்டுவருவதற்கு ஆதரவினை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,