பாராளுமன்ற சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என தெரிவித்து அவருக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இதனை தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது ஈரான் – இஸ்ரேல் மோதல் குறித்து கருத்து வெளியிடுவதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இடமளித்திருக்கவில்லை.
அதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை மண்டபத்தில் இருந்து வெளிநடப்புச் செய்திருந்தனர்.
இந்நிலையில் சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என்று கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு மேற்கொள்ள தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.