காத்தான்குடி பழைய கல்முனை வீதி (ஊர் வீதி) ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி முகாமையாளரிடம் நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி முகாமையாளர் எம்.நாஸார்தீன் உடனான சந்திப்பு இன்று (19) நகரசபையில் நடைபெற்றது.

இதன் போது பழைய கல்முனை வீதி(ஊர் வீதி) ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நகரசபை தவிசாளர் சுட்டிகாட்டியதுடன் உடனடியாக அந்த சேவையினை ஆரம்பிக்குமாறும் காத்தான்குடியில் இருந்து திருகோணமலைக்கான ஒரு போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.








