ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு தமிழரசு கட்சி சார்பாக போட்டியிட்டு தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள மு.முரளிதரன் மற்றும் சக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (21) சித்தாண்டியில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை சித்தாண்டி பிரதேச பொது மக்கள், சமூக அமைப்புக்கள் ஆலய நிர்வாக சபையினர் மற்றும் விளையாட்டு கழகங்கள் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது அவர்களை கௌரவிக்கும் முகமாக சித்தாண்டி முற்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்றதுடன், மலர் மாலை மற்றும் பொண்ணாடை அணிவித்து பொது மக்களினால் கௌரவிக்கப்பட்டனர்.




பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு பூசை நிகழ்வில் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து மதகுருமார்களின் நல்லாசியினையும் பெற்றனர்.
அத்துடன் வரவேற்பளித்து கௌரவித்த பொதுமக்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இதன்போது அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் மு.முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய நிலப்பரப்பினை கொண்ட பிரதேச சபையாக ஏறாவூர் பற்று பிரதேச சபை அமைந்துள்ளது என்றும்
அத்துடன் நான்கு மதங்களை கொண்டமைந்த மக்கள் வாழ்கின்ற பிரதேசமாக காணப்படுகிறது.
எனவே தேசியத்தில் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண் போகாத வண்ணம் செயற்படுவேன் என அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் சித்தாண்டி பிரதேசத்தில் உள்ள சகல ஆலயங்களுக்கும் நேரில் சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் பொதுமக்களினை சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்தது கொண்டனர்.
நேற்றைய கௌரவிப்பு நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்காக போட்டியிட்ட
மாவடிவேம்பு, சித்தாண்டி, ஈரளக்குளம், போன்ற இடங்களில் போட்டியிட்டு தெரிவான உறுப்பினர்களும் அதற்கு துணையாக நின்ற பட்டியல் வேட்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.








