ஈரானின் 6 இராணுவ விமான நிலையங்கள் மீது இன்று (23) இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
F-14, F-5, AH-1 உள்ளிட்ட 15 போர் விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் ஆகியன சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இஸ்ரேல் அரசின் பாதுகாப்பை உறுதி செய்ய, தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.









