கட்டாரின் தலைநகரான தோஹாவில், அமெரிக்கா இயக்கும் அல் உதெய்ட் விமானத் தளத்திற்கு எதிராக ஈரான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
குறித்த தளத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மேற்கத்திய இராஜதந்திரி கூறியதை அடுத்து, அப்பகுதியில் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.

அத்துடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அரபு நாடுகளில் உள்ள தங்கள் குடிமக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.
அதேசமயம் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம், கட்டாரில் உள்ள தங்களது குடிமக்களை “மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க” அறிவுறுத்தியுள்ளன.
இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா இன்று இரவு தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வெளிவந்த நிலையில், கட்டார் தற்காலிகமாக தனது வான்வெளியை மூட தீர்மானித்துள்ளதுடன், பஹ்ரைனும் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து, குவைத் அரசும் அதன் வான்பரப்பை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது.
இதன் காரணமாக தோஹா நோக்கி சென்ற அனைத்து விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.









