ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
சற்று முன்னர் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலிய படையினர் அடையாளம் கண்டு அவற்றை இடைமறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை கிடைத்ததும் மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறும் மறுஅறிவித்தல் வரும்வரை அங்கிருந்து வெளியேறவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஈரான் பொலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம் இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக இத் தாக்குதலுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி, X தளத்தில் வெளியிட்ட பதிவில், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமோ அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தமோ இல்லை என தெரிவித்த சில மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியுள்ளது.









