தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே தொடர்ந்து நிலவும் பதற்றங்கள் காரணமாக, தாய்லாந்து கம்போடியாவுக்குள் செல்லும் தனது எல்லைக் கடவையை மூடியுள்ளது.
தாய்லாந்து இராணுவம் மற்றும் கடற்படையின் அறிக்கைகளின்படி, தாய்லாந்து மற்றும் வெளிநாட்டினர் என அனைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கம்போடிய எல்லையைக் கடக்க தாய்லாந்து இராணுவம் மற்றும் கடற்படை தடை விதித்துள்ளது.

மே 28 அன்று சர்ச்சைக்குரிய சோங் போக் எல்லைக்கு அருகே நடந்த இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒரு கம்போடிய சிப்பாய் கொல்லப்பட்டார், இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தைத் தூண்டியது.
குறித்த துப்பாக்கிச் சூடு இன உணர்வு மற்றும் இரு அரசாங்கங்களாலும் பழிவாங்கும் போக்கைத் தூண்டியது. கம்போடியா சமீபத்தில் தாய்லாந்தில் இருந்து அனைத்து பழங்கள் மற்றும் மரக்கறி இறக்குமதியையும் தடை செய்தது.
அது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் இருந்து தாய்லாலந்து திரைப்படங்களைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








