புலத்சிங்கள, ஹல்வதுரவில் இளைஞனொருவர் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் ஹொரண வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் புலத்சிங்கள, ஹல்வதுர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








